தெலங்கானாவில் 6 பேருடன் சென்ற கார் நாகார்ஜுன சாகர் கால்வாயில் விழுந்து விபத்துக்குள்ளானது.
தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தில் நேற்றிரவு நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு காரில் திரும்பினர். இந்த கார் சூர்யபெட் மாவட்டம் சக்கிரலா கிராமம் அருகே வந்துகொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்து நாகார்ஜுன சாகர் கால்வாயில் விழுந்து விபத்துக்குள்ளானது.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் 6 பேரையும் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.