தில்லி காங்கிரஸ் தலைவராக சுபாஷ் சோப்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ஷீலா தீட்சித் தில்லி காங்கிரஸ் பிரிவின் தலைவராக இருந்தார். கடந்த ஜூலை மாதம் அவருடைய மறைவுக்குப் பிறகு, தில்லி காங்கிரஸ் தலைவர் பதவி காலியாகவே இருந்தது. இந்நிலையில், தில்லி காங்கிரஸ் தலைவராக சுபாஷ் சோப்ரா நியமிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. மேலும் காங்கிரஸ் தலைவர், கீர்த்தி ஆசாத்தை தில்லி காங்கிரஸின் பிரசாரக் குழுத் தலைவராக நியமித்துள்ளதாகவும் அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தில்லியில் அடுத்த ஆண்டு ஜனவரி - பிப்ரவரி மாதத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதைத்தொடர்ந்து வெளியான மற்றொரு செய்திக் குறிப்பில், மணிப்பூர் மாநில காங்கிரஸ் பிரிவுத் தலைவராக எம். ஓகேந்திரோ நியமிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மணிப்பூர் காங்கிரஸ் பிரிவுத் தலைவராக இருந்து பங்களிப்பை ஆற்றியமைக்காக காய்காங்கமுக்கு அக்கட்சி வாழ்த்து தெரிவித்துள்ளது.