மகாராஷ்டிராவில் பேரவைத் தேர்தல்: மீண்டும் ஆட்சி அமைக்கிறதா பாஜக?

மகாராஷ்டிர பேரவைத் தேர்தலில் பாஜக மற்றும் சிவசேனா கூட்டணி சுமார் 180 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகின்றன. 
மகாராஷ்டிராவில் பேரவைத் தேர்தல்: மீண்டும் ஆட்சி அமைக்கிறதா பாஜக?


மகாராஷ்டிர பேரவைத் தேர்தலில் பாஜக மற்றும் சிவசேனா கூட்டணி சுமார் 180 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகின்றன. 

மகாராஷ்டிராவில் கடந்த திங்கள்கிழமை சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதன் வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை தொடங்கியது. மகாராஷ்டிராவில் தொடக்கம் முதலே பாஜக மற்று சிவசேனா கூட்டணி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றன. 

வாக்கு எண்ணிக்கை நிலவரம்

பாஜக கூட்டணி: 164 தொகுதிகள்

காங்கிரஸ் கூட்டணி: 95 தொகுதிகள்

பிற கட்சிகள்: 29 தொகுதிகள்

மகாராஷ்ராவில் ஆட்சி அமைப்பதற்கு 145 இடங்கள் தேவை என்ற நிலையில், பாஜக மற்றும் சிவசேனா கூட்டணி 164 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.

கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்:

பாஜக: 164 இடங்கள்; சிவசேனா: 124 இடங்கள்

காங்கிரஸ்: 147 இடங்கள்; தேசியவாத காங்கிரஸ்: 121 இடங்கள்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com