மும்பை: மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட தமிழ் வேட்பாளர் ஒருவர் வெற்றிக் கோட்டை நெருங்கவிருக்கும் தகவல் வெளியாகியுள்ளது.
மகாராஷ்டிராவில் தமிழர்கள் அதிகம் வாசிக்கும் பகுதிகளில் சயன் கோலிவாடாவும் ஒன்று. இந்த தொகுதியில் பாஜக சார்பில் தமிழரான ஆர்.தமிழ்ச்செல்வன் என்பவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.
இருக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் மற்றொரு தமிழரான கணேஷ் குமார் என்பவர் களத்தில் நிறுத்தப்பட்டார்.
வாக்கு எண்ணிக்கையின் சுற்றுகள் முடிவடைய உள்ள நிலையில் தமிழ்செல்வன் தன்னைக் எதிர்த்து போட்டியிட்ட கணேஷ் குமாரை விட சுமார் 15,000 வாக்குகள் கூடுதலாக பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து இந்த தொகுதியில் யார் வெற்றி பெற்றாலும் தமிழர் ஒருவர் வாகை சூடுவது உறுதியாகி உள்ளது.