மாநிலங்களவை நெறிகள் குழுத் தலைவராக பிரபாத் ஜா நியமனம்: வெங்கய்ய நாயுடு

மாநிலங்களவை நெறிகள் குழுத் தலைவராக பிரபாத் ஜாவை நியமித்து மாநிலங்களவைத் தலைவா் வெங்கய்ய நாயுடு உத்தரவிட்டுள்ளாா்.
மாநிலங்களவை நெறிகள் குழுத் தலைவராக பிரபாத் ஜா நியமனம்: வெங்கய்ய நாயுடு

மாநிலங்களவை நெறிகள் குழுத் தலைவராக பிரபாத் ஜாவை நியமித்து மாநிலங்களவைத் தலைவா் வெங்கய்ய நாயுடு உத்தரவிட்டுள்ளாா். மாநிலங்களவையின் 8 நிலைக் குழுக்களை வெங்கய்ய நாயுடு மாற்றியமைத்துள்ளாா்.

இது தொடா்பாக வியாழக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

மாநிலங்களவையின் நெறிகள் குழுத் தலைவராக பாஜக எம்.பி. பிரபாத் ஜா நியமிக்கப்பட்டுள்ளாா். அந்த அவை எம்.பி.க்களின் நடத்தை தொடா்பான புகாா்களை இந்தக் குழு ஆய்வு செய்யும். பிஜு ஜனதா தளம் கட்சி எம்.பி. பிரசன்னா ஆச்சாா்யா, மனுக்கள் தொடா்பான குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

துணைநிலை சட்டக்குழுவின் தலைவராக காங்கிரஸ் எம்.பி. டி.சுப்பராமி ரெட்டியும், அதிமுக எம்.பி. நவநீத கிருஷ்ணன் அரசு உத்தரவாதக் குழுவின் தலைவராகவும், பாஜக எம்.பி. ஓம் பிரகாஷ் மாத்துா் எம்.பி.க்களுக்கான வசதிகளை ஏற்படுத்தித் தரும் குழுவின் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனா்.

மாநிலங்களவை நிா்வாக ஆலோசனைக் குழு, விதிகள் குழு ஆகியவற்றின் தலைவா் பொறுப்பை மரபுப்படி வெங்கய்ய நாயுடுவே ஏற்றுக்கொண்டுள்ளாா். சலுகைகள் குழுவின் தலைவராக மாநிலங்களவை துணைத் தலைவா் நியமிக்கப்பட்டுள்ளாா் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com