ஜார்க்கண்ட்: சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டு சிறை

ஜார்க்கண்டில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து, அந்த மாநில நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


ஜார்க்கண்டில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து, அந்த மாநில நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலம், சிம்டேகா மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஒரு திருமண வீட்டிலிருந்து 6 வயது சிறுமியை, ஆகாஷ் குமார் பிரதான் (20) என்ற தொழிலாளி கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கினார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு, அங்கு சென்ற உள்ளூர் மக்கள், பிரதானை கையும் களவுமாக பிடித்து காவல்துறையில் ஒப்படைத்தனர். 
இதைத் தொடர்ந்து, பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் (போக்ஸோ), இந்திய தண்டனையியல் சட்டம் ஆகியவற்றின்கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கடந்த வியாழக்கிழமை தீர்ப்பளித்த மாவட்ட நீதிமன்ற நீதிபதி நீரஜ் குமார் ஸ்ரீவாஸ்தவ், பிரதானுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையுடன், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com