மேற்கு வங்கத்தில் மத்திய அமைச்சர் சுப்ரியோ மீது தாக்குதல்

மேற்கு வங்கத்தில் உள்ள ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ வியாழக்கிழமை கலந்துகொண்ட நிகழ்ச்சியில் ஏற்பட்ட தள்ளுமுள்ளில் அவர் தாக்கப்பட்டார்.
கொல்கத்தாவில் உள்ள ஜாதவ்பூர் பல்கலையில் வியாழக்கிழமை ஏற்பட்ட தள்ளுமுள்ளைத் தொடர்ந்து தாக்கப்பட்ட மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ.
கொல்கத்தாவில் உள்ள ஜாதவ்பூர் பல்கலையில் வியாழக்கிழமை ஏற்பட்ட தள்ளுமுள்ளைத் தொடர்ந்து தாக்கப்பட்ட மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ.


மேற்கு வங்கத்தில் உள்ள ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ வியாழக்கிழமை கலந்துகொண்ட நிகழ்ச்சியில் ஏற்பட்ட தள்ளுமுள்ளில் அவர் தாக்கப்பட்டார்.
கொல்கத்தாவின் புறநகர்ப் பகுதியில் உள்ள ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் ஆர்எஸ்எஸ் சார்பு மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்(ஏபிவிபி) சார்பில் கருத்தரங்கு நிகழ்ச்சிக்கு வியாழக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் உரையாற்றுவதற்காக, மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை இணையமைச்சர் பாபுல் சுப்ரியோ பல்கலைக்கழகத்துக்கு வந்தார்.
அவரை உள்ளே செல்லவிடாமல் தடுத்து நிறுத்தி இந்திய மாணவர்கள் கூட்டமைப்பு (எஸ்எஃப்ஐ), கலைக்கல்லூரி மாணவர் சங்கம் (ஏஎஃப்எஸ்யு) ஆகிய இடதுசாரி அமைப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் முற்றுகையிட்டனர். அவருக்கு எதிராக கருப்புக் கொடிகளைக் காண்பித்து, திரும்பிச் செல்லுமாறு கோஷங்களை எழுப்பினர். ஒன்றரை மணி நேரம் நீடித்த வாக்குவாதம், பின்னர் தள்ளுமுள்ளானது. பிறகு அவர் பல்கலைக்கழகத்துக்குள் சென்று நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
அமைச்சர் மீது தாக்குதல்:  பல்கலைக்கழகத்தில் உரை நிகழ்த்தி முடித்துவிட்டு மாலை 5.00 மணியளவில் அவர் வெளியே வந்தபோதும், அவரது காரை வழிமறித்துக் கொண்டு இடதுசாரி மாணவர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, மீண்டும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது அமைச்சர் தாக்கப்பட்டார்.
 இதுகுறித்து அமைச்சர் பாபுல் சுப்ரியோ, செய்தியாளர்களிடம் கூறியதாவது: 
நான் இங்கு அரசியல் செய்வதற்காக வரவில்லை. மாணவர்கள் எனது முடியைப் பிடித்து இழுத்து, என்னைத் தள்ளி விட்டனர். அவர்களது செய்கைகள் எனக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. பல்கலைக்கழக வளாகத்தில் அமைதியை சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபட்ட மாணவர்கள், கூட்ட நெரிசல், தள்ளுமுள்ளு ஏற்படுத்தினர் என்றார் அவர்.
ஆளுநர் விரைந்தார்: மத்திய அமைச்சர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் அவர் தாக்கப்பட்டது குறித்து அறிந்த மாநில ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான ஜகதீப் தன்கர், ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்துக்கு விரைந்தார்.
 புறப்படும் முன் அவர், பிடிஐ செய்தியாளருக்கு அளித்த பேட்டியில், பாபுல் சுப்ரியோவை மாணவர்கள் முற்றுகையிட்ட சம்பவம், மிகவும் தீவிரமான விஷயம். இது, மாநிலத்தின் சட்டம்-இழுங்கு நிலைமையை பிரதிபலிக்கிறது என்றார்.
தலைமைச் செயலருக்கு உத்தரவு:  அதைத் தொடர்ந்து, பல்கலைக்கழக வளாகத்தில் பதற்றத்தைத் தணிப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தலைமைச் செயலருக்கு ஆளுநர் ஜகதீப் தன்கர் உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com