கர்நாடகாவில் 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை ஒத்திவைக்கிறோம்: உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்

கர்நாடகத்தில் எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்ட 15 தொகுதிகளுக்கு நடத்தப்பட இருந்த இடைத்தேர்தலை ஒத்திவைப்பதாக உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
கர்நாடகாவில் 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை ஒத்திவைக்கிறோம்: உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்

கர்நாடகத்தில் எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்ட 15 தொகுதிகளுக்கு நடத்தப்பட இருந்த இடைத்தேர்தலை ஒத்திவைப்பதாக உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, 17 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், 15 தொகுதிகளுக்கு அக். 21-ஆம் தேதி இடைத் தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து 17 எம்எல்ஏக்கள் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, அடுத்தகட்ட விசாரணையை அக்டோபர் 22ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக அறிவித்தார். இதையடுத்து இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இறுதி முடிவு எடுக்கும் வரை இடைத் தேர்தலை ஒத்திவைப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

எச்.டி.குமாரசாமி தலைமையிலான மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு மீது அதிருப்தி அடைந்திருந்த 14 காங்கிரஸ், 3 மஜத எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜிநாமா செய்தனர். இதனிடையே, 17 எம்எல்ஏக்களின் ராஜிநாமா கடிதங்களை நிராகரித்திருந்த அப்போதைய பேரவைத் தலைவர் கே.ஆர்.ரமேஷ்குமார், கட்சித் தாவல் சட்டத்தின்கீழ் 17 பேரின் எம்எல்ஏ பதவிகளையும் தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்டார். இதன் விளைவாக, மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழ்ந்தது. 

எதிர்த்து வழக்கு: இதனிடையே, தகுதிநீக்கம் செய்யப்பட்ட 17 எம்எல்ஏக்களும் பேரவைத் தலைவர் பிறப்பித்துள்ள ஆணையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு விசாரணை கடந்த 3 மாதங்களாக நடைபெற்றுவரும் நிலையில், செப். 23-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தேர்தல் ஆணையம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் இடைத் தேர்தலில் போட்டியிட எந்த ஆட்சேபனையும் இல்லை என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் வெற்றிபெற்ற வேட்பாளர்களுக்கு எதிரான வழக்கு நிலுவையில் உள்ளதால்,  மஸ்கி, ராஜராஜேஸ்வரி நகர் ஆகிய 2 தொகுதிகளுக்கு மட்டும் தற்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை என்பதும், அந்த இரண்டு தொகுதிகள் நீங்கலாக, அத்தானி, காக்வாட், கோகாக், எல்லாபுரா, ஹிரேகேரூர், ரானிபென்னூர், விஜயநகரா, சிக்பளாப்பூர், கே.ஆர்.புரம், யஷ்வந்த்பூர், மகாலட்சுமி லேஅவுட், சிவாஜி நகர், ஹொசபேட், கே.ஆர்.பேட், ஹுன்சூர் ஆகிய 15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com