காங்கிரஸ் சமூக ஊடகப் பிரிவுத் தலைவராக ரோஹன் குப்தா நியமிக்கப்பட்டார்.
இதற்கு முன்பு இந்தப் பொறுபை நடிகையும், கர்நாடக காங்கிரஸ் முக்கியப் பிரமுகருமான திவ்யா ஸ்பந்தனா கவனித்து வந்தார்.
இதுதொடர்பாக காங்கிரஸ் வெளியிட்ட அறிக்கையில், "கட்சியின் சமூக ஊடகப் பிரிவின் புதிய தலைவராக ரோஹன் குப்தா உடனடியாக நியமிக்கப்படுகிறார்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்சியின் ஊடகப் பிரிவு ஒருங்கிணைப்பாளராக பொறுப்பு வகித்த அனுபவம் கொண்டவர் ரோஹன் குப்தா என்பது குறிப்பிடத்தக்கது.