குடியை நிறுத்தியதால் பாதிக்கப்படும் குடிகாரர்களுக்கு மது விற்கும் திட்டத்துக்குக் கேரள உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
ஊரடங்கு உத்தரவு காரணமாக கேரளத்தில் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளதால், மது குடிக்க முடியாததால் சிலர் தற்கொலை செய்துகொண்ட செய்திகள் வெளியாகின. இந்நிலையில், மருத்துவர்களின் பரிந்துரைப்படி, மது பிரியர்களுக்கு 3 லிட்டர் மது விற்பனை செய்யலாம் என முதல்வர் பினராயி விஜயன் கூறியிருந்தார்.
இதை எதிர்த்து, எம்.எல்.ஏ. பிரதாபன் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கில், மது விற்கும் முதல்வரின் திட்டத்துக்கு மூன்று வாரங்கள் தடை விதித்து நீதிமன்றம் உத்தரவி்ட்டுள்ளது.