கர்நாடகத்தில் இன்று (சனிக்கிழமை) புதிதாக 5,172 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்ற இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கர்நாடக மாநில கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய செய்திக் குறிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி, அங்கு கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,172 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 98 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து கர்நாடகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 1,29,287 ஆக உயர்ந்துள்ளது. இதில் 53,648 பேர் குணமடைந்துள்ளனர், 2,412 பேர் பலியாகியுள்ளனர். இன்றைய தேதியில் அங்கு 73,219 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருவோரில், 602 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.