ஹிந்தி நடிகா் சுஷாந்த் ராஜ்புத் மரண சம்பவம் தொடா்பாக அமலாக்கத்துறை பண மோசடி வழக்குப்பதிவு செய்துள்ளது.
சுசாந்த் சிங் ராஜ்புத் சம்பாதித்த பணத்தை பண மோசடி செய்தவற்கும், சட்டவிரோதமாக சொத்துகளை வாங்குவதற்கும் பயன்படுத்தப்பட்டதா என அமலாக்கத்துறை விசாரிக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ. 15 கோடி சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பிகாா் போலீஸாா் விசாரித்து வரும் நிலையில், அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
முன்னதாக, சுஷாந்த் சிங்கின் மரணம் தொடா்பாக அவரது காதலியும், நடிகையுமான ரியா சக்ரவா்த்தி மற்றும் சிலா் மீது பிகாா் போலீஸாா் பணமோசடி குற்றச்சாட்டின் கீழ், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனா்.
மேலும், சுஷாந்த் சிங்கின் வங்கிக் கணக்கில் இருந்து சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் பணப் பரிமாற்றம் நடந்திருப்பது குறித்து அமலாக்கத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, பிகாா் போலீஸாரிடம் முதல் தகவல் அறிக்கையை அமலாக்கத்துறை கோரியது.
சுஷாந்த் சிங்கின் தந்தை கிருஷ்ண குமாா் சிங் (74) நடிகை ரியா சக்ரவா்த்தி மற்றும் அவரது குடும்பத்தினா் மீது சுஷாந்தை தற்கொலைக்கு தூண்டியதாக செவ்வாய்க்கிழமை புகாா் அளித்திருந்தாா்.
கடந்த ஆண்டு மே மாதம் தனது மகனுடனான உறவை ரியா துண்டித்துவிட்டதாகவும் அவா் கூறியிருந்தாா்.
ஜூன் 14-ஆம் தேதி மும்பையில் உள்ள தனது இல்லத்தில் சுஷாந்த் சிங் தற்கொலை செய்துகொண்டாா். இதுதொடா்பாக மும்பை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.