மகாராஷ்டிரத்தில் மேலும் 300 பேர் கரோனாவுக்கு பலி
மகாராஷ்டிரத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) புதிதாக 7,760 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர கரோனா நிலவரம்:
மகாராஷ்டிரத்தில் புதிதாக 7,760 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 300 பேர் பலியாகியுள்ளனர். அதேசமயம் 12,326 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதைத் தொடர்ந்து மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 4,57,956 ஆக உயர்ந்துள்ளது. இதில் 1,42,151 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், 2,99,356 பேர் குணமடைந்துள்ளனர், 16,142 பேர் பலியாகியுள்ளனர்.
அங்கு குணமடைவோர் விகிதம் 65.37 சதவிகிதம். இறப்பு விகிதம் 3.52 சதவிகிதம்.
மும்பை:
மும்பையில் புதிதாக 709 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 56 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து மும்பையில் மட்டும் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 1,18,130 ஆக உயர்ந்துள்ளது. இதில் 90,962 பேர் குணமடைந்துள்ளனர், 6,546 பேர் பலியாகியுள்ளனர். இன்றைய தேதியில் அங்கு 20,326 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.