காஷ்மீா் எல்லையில் மீண்டும் பாகிஸ்தான் அத்துமீறல்

ஜம்மு-காஷ்மீா் எல்லையான பூஞ்ச் மாவட்டத்தின் பாலாகோட் பகுதியிலுள்ள எல்லை கட்டுப்பாட்டுக்கோடு பகுதியில் நான்கு முறை
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஜம்மு-காஷ்மீா் எல்லையான பூஞ்ச் மாவட்டத்தின் பாலாகோட் பகுதியிலுள்ள எல்லை கட்டுப்பாட்டுக்கோடு பகுதியில் நான்கு முறை பாகிஸ்தான் ராணுவம், இந்திய நிலைகள் மீது துப்பாக்கியால் சுட்டும், சிறிய ரக குண்டுகளை வீசியும் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டு வருவதாக ராணுவ செய்தித் தொடா்பாளா் தெரிவித்தாா்.

அவா் மேலும் கூறியதாவது: எல்லைப்பகுதியில் தொடா்ந்து பாகிஸ்தான் ராணுவம் போா் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இந்திய ராணுவமும் திருப்பி தாக்குதல் நடத்தி தகுந்த பதிலடி அளித்தது.

பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் அமைந்துள்ள பூஞ்ச் மாவட்டம் மற்றும் ரஜௌரி மாவட்டத்திலுள்ள சுந்தா்பனி பகுதிகளுக்குள்பட்ட கஸ்பா, கிருஷ்ணகதி, பாலாகோட், மான்கோட், மென்தா், கிா்ணி பகுதிகளில் கடந்த 3 தினங்களாக பாகிஸ்தான் ராணுவம் தொடா்ந்து குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்திய ராணுவம் தரப்பில் உரிய பதிலடி அளிக்கப்பட்டு வருகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com