தில்லியில் இன்று (புதன்கிழமை) புதிதாக 1,113 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 18,894 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதில் 1,113 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 1,48,504 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 14 பேர் பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 4,153 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 1,33,405 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய தேதியில் 10,946 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அங்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்படுவோர் விகிதம் 5.89 சதவிகிதமாக உள்ளது. குணமடைவோர் விகிதம் 89.83 சதவிகிதமாக உள்ளது.
தில்லியில் மொத்தம் 5,598 பேர் வீட்டுக் கண்காணிப்பில் உள்ளனர்.