கர்நாடகத்தில் புதிதாக 7,883 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கர்நாடக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய செய்திக் குறிப்பை அந்த மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. இதன்படி, அங்கு புதிதாக 7,883 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேசமயம், 7,034 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 113 பேர் பலியாகியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 1,96,494 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 1,12,633 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் 3,510 பேர் பலியாகியுள்ளனர். இன்றைய தேதியில் 80,343 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெற்று வருபவர்களில் 701 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.
கர்நாடகத்தில் இன்றைக்கு புதிதாக பாதிக்கப்பட்டோரில் பெங்களூரில் மட்டும் 2,802 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.