மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு விளையாட்டுத்துறை அமைச்சகம் அனைத்தையும் செய்யும் என மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியுள்ளார்.
29ஆவது உலக மாற்றுத் திறனாளி தினத்தை முன்னிட்டு, காணொலிக் காட்சி மூலம் நடந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு பேசியதாவது:
`மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர்கள், நம் நாட்டு மக்கள் ஒவ்வொருவரின் பலமாகவும், உத்வேகமாகவும் உள்ளனர். அவர்களுக்கு ஆதரவளிக்க விளையாட்டுத்துறை அமைச்சகம் அனைத்தையும் செய்யும்.
விளையாட்டு வீரர்களுக்கும், மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. நாம் இரு தரப்பினருக்கும், ஒரே விதமான பாராட்டு, அங்கீகாரம், பரிசுத் தொகை ஆகியவற்றை வழங்குகிறோம்.
மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு முடிந்த அளவு உதவும்படி மாநில அரசுகளுக்கு நான் வேண்டுகோள் விடுப்பேன்.’ இவ்வாறு அவர் கூறினார்.
மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு, மத்திய அரசு எப்போதும், விரைவான உதவி அளிப்பதற்காக பத்ம ஸ்ரீ, கேல் ரத்னா, அர்ஜூனா விருதுகளைப் பெற்ற விளையாட்டு வீரர் தேவேந்திர ஜஜாரியா நன்றி தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதல்வா் முன்னிலையில் திமுகவில் இணைந்த அமமுக மாநில நிா்வாகிகள்

இன்று மகிழ்ச்சி யாருக்கு? தினப்பலன்கள்!

பழங்குடியின மக்கள் தோ்தல் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு

உத்தரமேரூா் அருகே மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்: அரசின் சாா்பில் அஞ்சலி
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


