இந்தியா
மேற்குவங்க முன்னாள் முதல்வருக்கு மூச்சுப் பிரச்னை: மருத்துவமனையில் சிகிச்சை
மேற்குவங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா மூச்சுப் பிரச்னையால் பாதிக்கப்பட்டு கொல்கத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேற்குவங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா மூச்சுப் பிரச்னையால் பாதிக்கப்பட்டு கொல்கத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு அடிப்படை பரிசோதனைகள் செய்யப்பட்டு அதனடிப்படையில் சிகிச்சை அளிக்கப்படும் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேற்குவங்க மாநிலத்தில் கடந்த 2000-ஆம் ஆண்டு முதல் 2011-ஆம் ஆண்டு வரை முதல்வராக புத்ததேவ் பட்டாச்சார்யா பதவி வகித்தார்.
76 வயதான அவர் மூப்பு காரணமாக பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வந்த நிலையில், தற்போது மூச்சுப் பிரச்னை காரணமாக கொல்கத்தாவிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.