

விவசாயிகளுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை என 18 ஆயிரம் கோடியை பிரதமர் நரேந்திர மோடி விடுவித்தார்.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லி எல்லைகளில் விவசாயிகள் போராடி வரும் நிலையில், விவசாயிகளுக்கு தவணைத்தொகையை விடுவித்து விவசாயிகளுடன் பிரதமர் உரையாடினார்.
மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களால் பெருநிறுவனங்களே லாபம் பெறும் என்றும், விவசாயிகள் தங்களது அடிப்படை உரிமைகளைக் கூட அடகு வைக்க வேண்டும் என தில்லி எல்லையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களது போராட்டம் 30-வது நாளை எட்டியுள்ளது.
இந்நிலையில், 9 கோடி விவசாயிகளுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை என 18 ஆயிரம் கோடியை பிரதமர் நரேந்திர மோடி விடுவித்தார்.
இதன் மூலம் 9 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் அடுத்த தவணைத்தொகையாக 18 ஆயிரம் கோடி செலுத்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.