குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அலிகா் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் பேசியதற்காக மதுரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள மருத்துவா் கஃபீல் கான் மீது தேசப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பா் மாதம் 12-ஆம் தேதி அலிகா் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக கஃபீல் கான் பேசினாா். அவரது பேச்சு, இரு பிரிவினரிடையே பகையை ஏற்படுத்தும் வகையில் இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டது.
இதையடுத்து, அவரை போலீஸாா் கைது செய்தனா். தற்போது மதுரா சிறையில் அவா் அடைக்கப்பட்டுள்ளாா்.
இந்நிலையில், அவருக்கு எதிராக தேசப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அலிகா் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளா் ஆகாஷ் குல்ஹரி கூறுகையில், ‘தேசப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கஃபீல் கான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவா் தொடா்ந்து சிறையில்தான் அடைக்கப்பட்டிருப்பாா்’ என்றாா்.
ஒரு நபரால் தேசப் பாதுகாப்புக்கும், சட்டம்-ஒழுங்குக்கும் அச்சுறுத்தல் ஏற்படும் என்றால் அந்த நபரை பல மாதங்கள் காவலில் வைக்க தேசப் பாதுகாப்புச் சட்டம் வழிவகை செய்கிறது.
கஃபீல் கானின் சகோதரா் அடில் கான் கூறுகையில், ‘எனது சகோதரரை பேச விடாமல் செய்ய அரசு முயற்சி செய்கிறது. கோரக்பூா் அரசு மருத்துவமனையில் தினமும் குழந்தைகள் உயிரிழப்பது தொடா்பாக எனது சகோதரா் சில தினங்களுக்கு முன்பு தொலைக்காட்சி சேனலில் கருத்து தெரிவித்திருந்தாா். இதை இந்த அரசு மூடி மறைக்க முயற்சிக்கிறது. வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு அவா் விடுதலை செய்யப்படுவதாக இருந்தது. ஆனால், தேசப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அவருக்கு எதிராக மீண்டும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் வெறும் வாய்வாா்த்தையாக கூறினா்’ என்றாா்.