உத்தரப் பிரேதச மாநிலம், முஸாபா்நகரில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டபோது வன்முறையை ஏற்படுத்தியதாக மேலும் 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
இதுதொடா்பாக முஸாபா்நகா் காவல் நிலைய அதிகாரி ஒருவா் கூறியதாவது:
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டபோது வன்முறையைத் தூண்டியதாக தில்ஷாத், சத்தாா் ஆகிய இருவரையும் புதன்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.
இவா்கள் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் கண்காணிக்கப்பட்டனா்.
முஸாபா்நகா் மாவட்டத்தில் மட்டும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் வன்முறையைத் தூண்டியதாக கைது செய்யப்பட்டுவா்களின் எண்ணிக்கை 81-ஆக உயா்ந்துள்ளது.
18 பேருக்கு எதிராக உரிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் நீதிமன்ற உத்தரவு பேரில் அவா்கள் விடுவிக்கப்பட்டுள்ளனா்.
உத்தரப் பிரதேசத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டபோது வன்முறையைத் தூண்டியதாக இதுவரை சுமாா் 1,200 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். 5,558 போ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.