கொல்கத்தா: கொல்கத்தாவில் பிப்ரவரி 2 ஆம் தேதி நடைபெறவுள்ள ஐடிபிஐ ஃபெடரல் லைஃப் இன்ஷ்யூரன்ஸ் மாரத்தான் ஓட்டத்தைக் கொடியசைத்துத் தொடக்கிவைக்கிறார் பேட்டிங் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர்.
இந்த மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்பதற்காக இதுவரை 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓட்டப் பந்தய வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.
நான்காவது முறையாக கொல்கத்தா நடைபெறும் இந்த மாரத்தான் போட்டியில், நான்கு வெவ்வேறு பிரிவுகளில் ஓட்டப்பந்தய வீரர்கள் பங்கேற்கின்றனர். முதலில் முழு மாரத்தான், பிறகு அரை மாரத்தான், அதன் பிறகு டைமண்ட் 10 கே மாரத்தான், இறுதியில் டைமண்ட் 5 கே.
எய்ம்ஸ் சான்றளித்துள்ள நிலையில் இந்தியத் தடகளக் கூட்டமைப்புடன் இணைந்து இந்த மாரத்தான் நடைபெறவுள்ளது.
ரேஞ்சர்ஸ் திடலிலிருந்து சரியாக அதிகாலை 4.30 மணிக்கு ஓட்டத்தை சச்சின் டெண்டுல்கர் தொடக்கிவைப்பார். அதன் பிறகு காலை 6.30 மணிக்கு அரை மாரத்தானும், தொடர்ந்து டைமண்ட் 10 கே மாரத்தான் காலை 7.45 மணிக்கும், பிறகு டைமண்ட் 5 கே மாரத்தான் காலை 8.15 மணிக்கும் தொடங்கி வைக்கப்படும்.