ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் 3 பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினா் சுட்டுக்கொன்றனா்.
இதுகுறித்து போலீஸாா் கூறியதாவது: புல்வாமா மாவட்டத்தில் உள்ள திரால் பகுதியில் இருக்கும் குல்ஷன்போரா என்னும் இடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ஞாயிற்றுக்கிழமை ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில், அப்பகுதியில் பாதுகாப்புப் படையினா் சோதனை மேற்கொண்டனா். அப்போது அங்கிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினா். இதையடுத்து பாதுகாப்புப் படையினா் பதில் தாக்குதல் நடத்தினா். இதில் 3 பயங்கரவாதிகள் உயிரிழந்தனா் என்றனா்.