குடியரசு தினத்தை முன்னிட்டு லடாக்கில் 17 ஆயிரம் அடி உயரத்தில் இந்தோ-திபெத் பகுதி எல்லைப் பாதுகாப்புப்படை வீரர்கள் ஞாயிற்றுக்கிழமை தேசிய கொடியேந்திச் சென்றனர்.
அப்பகுதியில் தற்போது மைனஸ் 20 டிகிரி அளவில் குளிர் நிலவுகிறது. 'ஹிம்வீர்ஸ்' என்றழைக்கப்படும் இந்தோ-திபெத் பகுதி எல்லைப் பாதுகாப்புப்படை வீரர்கள் 'பாரத் மாதா கீ ஜெய்' மற்றும் 'வந்தே மாதரம்' என்று தேசியக் கொடியை ஏந்தி நின்று முழங்கி தங்கள் உணர்வை வெளிப்படுத்தினர்.