மத்தியப் பிரதேசத்தில் மேலும் ஒரு காங்கிரஸ் எம்எல்ஏ தனது பதவியை ராஜிநாமா செய்தார்.
கடந்த மாா்ச் மாதம், ஜோதிராதித்யா சிந்தியா காங்கிரஸில் இருந்து 22 எம்எல்ஏக்களுடன் விலகி பாஜகவில் இணைந்ததால் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது. இதைத்தொடர்ந்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்து வருகின்றனர்.
ஏற்கெனவே காங்கிரஸ் எம்.எல்.ஏ. பிரத்யுமான் சிங் லோதி, படா மல்கேரா ஆகியோர் தங்களது பதவிகளை ராஜிநாமா செய்து பாஜகவில் இணைந்தனர். அந்த வகையில் இன்று மந்தாட்டா தொகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ நாராயண் படேல் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.
அவரது ராஜிநாமாவை சபாநாயகர் ராமேஸ்வர் சர்மா ஏற்றுக்கொண்டார். இதையடுத்து நாராயண் படேல் பாஜகவில் இணைந்தார். கடந்த 15 நாட்களில் ராஜிநாமா செய்த மூன்றாவது காங்கிரஸ் நாராயண் படேல் ஆவார். இதனிடையே வரும் நாள்களில் மேலும் சில காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்து பாஜகவில் சேரலாம் எனக் கூறப்படுகிறது.