பெங்களூரு: கர்நாடகத்தில் இன்று ஒரே நாளில் 5,536 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
இதுதொடர்பாக மாநில அரசு செவ்வாயன்று மாலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கர்நாடகத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 5,536 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மாநிலம் முழுவதும் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கையானது 1,07,001 ஆக அதிகரித்துள்ளது.
அதேபோல இன்று ஒரே நாளில் மேலும் 102 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
இதையடுத்து மொத்த இறப்பு எண்ணிக்கை 1,926 ஆக அதிகரித்துள்ளது.