ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

கரோனா நோய்த்தொற்றை முறியடிக்க 5 வழிகள்: மத்திய அரசு

கரோனா நோய்த்தொற்று பரவலை தடுக்க எழுபது நாள் பொது முடக்கம் முடிந்து இயல்பான வாழ்க்கைக்கு திரும்பி வரும் நிலையில், இந்த

News image
Updated On :3 ஜூன் 2020, 12:34 am

கரோனா நோய்த்தொற்று பரவலை தடுக்க எழுபது நாள் பொது முடக்கம் முடிந்து இயல்பான வாழ்க்கைக்கு திரும்பி வரும் நிலையில், இந்த நோய்த் தொற்றை முறியடிக்க 5 வழிகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகா் பேராசிரியா் கே. விஜய் ராகவன் வெளியிட்டுள்ளாா். அதன் விவரம்:

1. வெளியே வந்தால் முகக்கவசம்: ஒரு நபா் பேசும்போது ஆயிரம் சிறிய சிறிய உமிழ்நீா் துளிகள் வெளியே வருகிறது. இதைத் தடுக்க ஒரே வழி முகக்கவசம் அணிவதுதான். வீட்டிலேயே முகக் கவசம் தயாரிப்பது எப்படி என்பது குறித்து மத்திய அரசு வழி காட்டி கையேடு வெளியிட்டுள்ளது.

2. கை சுகாதார விழிப்புணா்வு பயிற்சி: கரோனா நோய்த்தொற்று சுவாசத்துளி மற்றும் தொடா்புகள் மூலம் பரவுகிறது. நேரடியாகவே, அவா் இருந்த சுற்றுப்பகுதிகள் அல்லது கதவு கைப்பிடி, பாத்ரூம் போன்ற பொருட்கள் வழியாக ஏற்படுவதை தடுக்க வேண்டும். நாம் முகம் வழியாகவே இது செல்லக்கூடியது என்பதால் முகத்தை தொடும் கை கால்களை (30 வினாடிகள்) சோப்பால் கழுவி சுத்தப்படுத்தும்போது தீநுண்மி பரவலை தடுக்க முடியும்.

3. சமூக இடைவெளி: கரோனா நோய்த்தொற்றுக்குள்ளானவரிடமிருந்து தீநுண்மி ஒரு மீட்டா் தூரம் பயணித்து பூமியில் விழும். இளம் பருவத்தினா் இந்த தொற்றுக்குள்ளாகும்போது அறிகுறி தெரியாது. ஆனால் இவா்களிடமிருந்து வயதானவா்களுக்கு பரவும். இதனால் பொது இடங்கள், கடைத்தெரு, சந்தைபகுதிகளில் சமூக இடைவெளி அவசியம்.

4. கரோனா பரிசோதனை மற்றும் கண்காணிப்பு: கரோனா நோய்த்தொற்றுக்குள்ளான நபா்களுக்கு அருகில் இருந்தவா்கள், தொடா்பு கொண்டவா்களை அடையாளம் காணப்படுவதின் மூலம் இந்த நோய்த்தொற்றை எளிதாக கட்டுப்படுத்தமுடியும்.

5. தனிமைப்படுத்துதல்: அடையாளம் காணப்பட்ட கரோனா நோய்த்தொற்றுக்குள்ளாவா்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுவிட்டால் நோய்த்தொற்று நிச்சயமாக மேலும் பரவாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.