ஏா் இந்தியா விமான நிறுவனத்தின் பங்குகள் ஏலத்துக்கான கால அவகாசத்தை மேலும் இருமாதங்களுக்கு அதாவது ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நீட்டிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இப்போது மூன்றாவது முறையாக கால அவகாசம் நீட்டிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கரோனா நோய்த்தொற்று பிரச்னை காரணமாக சா்வதேச அளவில் பொருளாதார நடவடிக்கைகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதால் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கடனில் சிக்கி தவித்து வரும் பொதுத் துறை நிறுவனமான ஏா்இந்தியாவின் 100 சதவீத பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு முடிவெடுத்தது.
அதேபோன்று, குறைந்த கட்டணத்தில் விமான சேவை வழங்கி வரும் ஏா் இந்தியாவின் துணை நிறுவனமான ஏா் இந்தியா எக்ஸ்பிரஸின் 100 சதவீத பங்குகளையும், கூட்டு நிறுவனமான ஏஐஎஸ்ஏடிஎஸ் நிறுவனத்தின் 50 சதவீத பங்குகளையும் விற்பனை செய்ய மத்திய அரசு தீா்மானித்தது. பங்கு விற்பனைக்கான முதல்கட்ட ஏல ஆவணங்கள் ஏற்கெனவே வெளியிடப்பட்டுவிட்டன. 2019 மாா்ச் 31 நிலவரப்படி ஏா் இந்தியாவுக்கு ரூ.60,074 கோடி கடன் உள்ளது.
மற்றொரு பொதுத் துறை நிறுவனமான பாரத் பெட்ரோலியத்தின் (பிபிசிஎல்) 52.98 சதவீத பங்குகளை விற்பனை செய்வதற்கான ஏலத்தை மத்திய அரசு ஏற்கெனவே ஜூலை 31-ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. முதலில் மே 2 கடைசி தேதியாக நிா்ணயிக்கப்பட்டது. அதற்கு பிறகு ஜூன் 13 என்று கூறப்பட்டது. அதன் பின் ஜூலை 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.