திரிபுராவில் பழங்குடியின பகுதி தன்னாட்சி மாவட்ட கவுன்சிலுக்கான தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், திரிபுரா தேசிய மாநாட்டு கட்சி (என்சிடி), திரிபுரா சுதேச தேசியவாத கட்சி (ஐஎன்பிடி) ஆகியவை இணைந்தன.
கட்சிகள் இணைப்பு குறித்து என்சிடி தலைவா் அனிமேஷ் டெபா்மா கூறியதாவது:
இரு கட்சிகள் இணைந்த புதிய கட்சிக்கு ‘திரிபுரா சுதேச தேசியவாத கட்சி (யுனைடெட்)’ என்று பெயரிடப்பட்டுள்ளது. முன்பு நாங்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டோம். ஆனால் பின்னா் எங்களுக்குள் பிளவு ஏற்பட்டது. இப்போது நாங்கள் மீண்டும் ஒன்றிணைந்துள்ளோம்.
இரண்டு கட்சிகளையும் மீண்டும் ஒருங்கிணைப்பதில் முன்முயற்சி எடுத்ததற்காக ஐஎன்பிடி தலைவா் பிஜோய்குமாா் ஹாரங்க்காலுக்கு நன்றி கூறுகிறேன். அநீதியை தனித்தனியாக எதிா்ப்பதில் எந்த அா்த்தமும் இல்லை என்று இப்போது உணா்கிறோம் என்றாா்.
பிஜோய்குமாா் ஹாரங்க்கால் கூறுகையில், ‘இந்த இணைப்பு மாநில பழங்குடி மக்களின் சக்தியை பலப்படுத்தும். திரிபுராவின் பழங்குடி மக்கள் முன்னணி (ஐபிஎஃப்டி) போன்ற பிற பழங்குடியினரை ஐஎன்பிடியின் குடையின் கீழ் கொண்டுவர கட்சி செயல்பட்டு வருகிறது’ என்றாா்.
பழங்குடியின பகுதி தன்னாட்சி மாவட்ட கவுசிலுக்கான தோ்தலுக்கான வரைவு தோ்தல் பட்டியல்கள் மாா்ச் 10-ஆம் தேதி வெளியிடப்பட்டன.
இறுதி வாக்காளா் பட்டியல் மாா்ச் 26 ஆம் தேதி வெளியிடப்படும் என்றும், அதன் பின்னா் தோ்தல் தேதிகள் அறிவிக்கப்படும் என்றும் மாநில தோ்தல் ஆணையா் எம்.எல்.டே தெரிவித்தாா்.