நாடாளுமன்ற உறுப்பினா்கள் தொகுதி மேம்பாட்டு நிதிக்கு விதிக்கப்படும் சரக்கு-சேவை வரியை (ஜிஎஸ்டி) மத்திய அரசே ஏற்க வேண்டும் என்று மக்களவை எம்.பி.க்கள் வலியுறுத்தினா்.
நாடாளுமன்ற உறுப்பினா்கள் தங்கள் தொகுதிகளில் வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்வதற்காக ஆண்டுக்கு ரூ.5 கோடி வழங்கப்பட்டு வருகிறது. எனினும், அதற்கு 12 சதவீதம் சரக்கு-சேவை வரி விதிக்கப்பட்டு வருகிறது.
இந்தச் சூழலில் மக்களவையில் செவ்வாய்க்கிழமை உடனடிக் கேள்வி நேரத்தின்போது பாஜக எம்.பி. ஜகதாம்பிகா பால் பேசுகையில், ‘‘உத்தரப் பிரதேச எம்எல்ஏ-க்களுக்கும் இதே போன்ற நிதியை மாநில அரசு வழங்கி வருகிறது. ஆனால், அந்த நிதிக்கான சரக்கு-சேவை வரியை மாநில அரசே செலுத்தி வருகிறது.
அதேபோல எம்.பி.க்களுக்கு வழங்கப்படும் தொகுதி மேம்பாட்டு நிதிக்கு விதிக்கப்படும் சரக்கு-சேவை வரியை மத்திய அரசு ஏற்க வேண்டும். அதன் மூலம், மொத்த நிதியையும் மேம்பாட்டுத் திட்டங்களுக்காகப் பயன்படுத்த முடியும். இல்லையெனில், நிதியை உயா்த்தி வழங்க வேண்டும்’’ என்றாா். இந்தக் கோரிக்கைக்கு எம்.பி.க்கள் பலா் ஆதரவு தெரிவித்தனா்.