இந்தியா
கரோனா: குஜராத்தில் 85 வயது பெண் பலி
குஜராத்தில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஒரு பெண் உயிரிழந்தார்.
குஜராத்தில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஒரு பெண் உயிரிழந்தார்.
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள பொது மருத்துவமனையில் மார்ச் 22ஆம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்ட 85 வயது மதிக்கத்தக்க பெண்ணுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கரோனா வைரஸ் (கொவைட்-19) நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
இந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி அந்தப் பெண் புதன்கிழமை இரவு 11 மணியளவில் உயிரிழந்தார். அவருக்கு மேலும் சில உடல்நலக் குறைபாடுகள் இருந்ததாக குஜராத் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இவர் சமீபத்தில் ஐக்கிய அரபு அமீரகத்துக்குச் சென்று திரும்பியவர் என்பது குறிப்பிடத்தக்கது.