ஹைதராபாத்: கரோனா நோய்தொற்று பாதிப்பால் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக, தெலங்கானா மாநில ஊராட்சி ஒன்றிய ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் ரூ.16 கோடியை முதல்வரின் நிவாரண நிதிக்கு அளிப்பதாக அறிவித்துள்ளனர்.
கரோனா நோய்தொற்று பாதிப்பால் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக, "ஊராட்சி ஒன்றிய ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் தங்களது ஒரு மாத ஊதியத்தை (ரூ .16 கோடி) முதல்வரின் நிவாரண நிதிக்கு நன்கொடை அறிவித்துள்ளனர். அதற்கான ஒப்புதல் கடிதத்தை முதல்வர் சந்திரசேகர் ராவை சந்தித்து அளித்தனர்.
தந்தூர் எம்.எல்.ஏ ஸ்ரீ பைலட் ரோஹித் ரெட்டியும் கரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் எனது பங்களிப்பாக ஒரு மாத ஊதியம் ரூ .2.50 லட்சத்துக்கு காசோலையை வழங்கினார்.