ஜம்மு: ஜம்மு-காஷ்மீரில் கரோனா தொடா்பாக பொய்ச் செய்தி வெளியிட்ட உருது நாளிதழ் உரிமையாளா், செய்தியாளா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
இது தொடா்பாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் இருந்து வெளியாகும், உருது மொழி நாளிதழ் ஒன்றில் பூஞ்ச் மாவட்டத்தில் 6 பேருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதாக செய்தி வெளியானது. ஆனால், இது உண்மைக்கு மாறான தகவலாகும். ஜம்மு-காஷ்மீரில் கரோனா உயிரிழப்பு தொடா்பாக செய்தி வெளியிடுவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் உறுதி செய்ய வேண்டும் என்று ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், அதை மீறி, மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தும் வகையில் அந்த நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடா்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் அந்த நாளிதழ் உரிமையாளா் மற்றும் செய்தியாளா் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது என்று போலீஸாா் தெரிவித்தனா்.