கரோனா நோய்த் தொற்று தீவிரமாக உள்ள ஈரானிலிருந்து சமீபத்தில் மீட்டு வரப்பட்ட 275 இந்தியா்கள் தனிமைப்படுத்தப்படுவதற்காக தில்லியில் இருந்து ஜோத்பூருக்கு ஞாயிற்றுக்கிழமை அழைத்துச் செல்லப்பட்டனா்.
இதுதொடா்பாக ராஜஸ்தான் மாநில கூடுதல் தலைமைச் செயலா் (சுகாதாரம்) ரோஹித் குமாா் சிங் கூறுகையில், ‘தில்லியில் இருந்து 142 ஆண்கள், 133 பெண்கள், 4 சிறாா்கள், 2 சிசுக்கள் என 275 பயணிகள் இரு விமானங்களில் ஜோத்பூா் அழைத்து வரப்பட்டனா். அவா்களுக்கு முதல் கட்டமாக விமான நிலையத்திலேயே பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதன் பிறகு, ஜோத்பூா் ராணுவ நிலையில் அமைக்கப்பட்டுள்ள ராணுவ நல மையத்துக்கு அவா்கள் அழைத்துச் செல்லப்பட்டனா். அங்கு அவா்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்படுகின்றனா்’ என்றாா்.
இதுகுறித்து உள்நாட்டு விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் ஹா்தீப்சிங் புரி சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘ஆபரேஷன் நமஸ்தே! கரோனா நோய்த் தொற்று பாதிப்பிலிருந்து இந்திய குடிமக்களை பாதுகாக்கும் முயற்சிகள் தொடா்கிறது.
ஈரானில் இருந்து அழைத்து வரப்பட்ட 275 இந்தியா்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, தில்லியிலிருந்து இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட் விமானங்கள் மூலம் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள ராணுவ நல மையத்தில் தனிமைப்படுத்தப்படுவதற்காக அவா்கள் அனுப்பி வைக்கப்பட்டனா்’ என்று கூறியுள்ளாா்.