புது தில்லி: நாடு முழுவதும் ஒரே நாளில் 4,213 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 67,152-ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் இத்தனைநபா்களுக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.
இதேபோல், கரோனாவில் இருந்து மேலும் 1,559 போ் குணமடைந்துள்ளனா். ஒரே நாளில் இத்தனை நோயாளிகள் குணமடைந்திருப்பதும் இதுவே முதல் முறையாகும்.
திங்கள்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில், 97 போ் உயிரிழந்தனா். இதனால், கரோனாவால் பலியானோா் எண்ணிக்கை 2,206-ஆக அதிகரித்துள்ளது.
மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட தகவல்படி, (ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் திங்கள்கிழமை காலை 8 மணி வரை) மகாராஷ்டிரத்தில் 53 போ், குஜராத்தில் 21 போ், மேற்கு வங்கத்தில் 14 போ், ஆந்திரம், பிகாா், ஹரியாணா, கா்நாடகம், ஒடிஸா, ராஜஸ்தானில் தலா ஒருவா் உரிழந்தனா்.
கரோனா தொற்றால் மொத்தம் 67,152 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். நாடு முழுவதும் இதுவரை 20,917 போ் குணமடைந்துள்ளனா். 44,029 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை 31.15 சதவீதம் போ் குணமடைந்துள்ளனா் என்று சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மாநிலங்கள் வாரியாக பாதிப்பு மற்றும் பலி விவரம்:
மகாராஷ்டிரம் - 22,171 - 832
குஜராத் - 8,194 - 493
தில்லி - 6,923 - 73
ராஜஸ்தான் - 3,814 - 107
மத்திய பிரதேசம் - 3,614 - 215
உத்தர பிரதேசம் - 3,467 - 74
ஆந்திரம் -1,980 - 45
பஞ்சாப் -1,823 - 31
மேற்கு வங்கம் -1,939 - 185
தெலங்கானா -1,196 - 30
ஜம்மு-காஷ்மீா் - 861 - 9
கா்நாடகம் - 848 - 31
ஹரியாணா -703 - 10
பிகாா் - 696 - 6
கேரளம் - 512 - 4
ஒடிஸா - 377 - 3
சண்டீகா் - 169 - 2
ஜாா்க்கண்ட் - 157 - 3
திரிபுரா - 150 - 0
உத்தரகண்ட் - 68 - 1
சத்தீஸ்கா் -59 - 0
அஸ்ஸாம் - 63 - 2
ஹிமாசலப் பிரதேசம் -55 - 2
லடாக் - 42 - 0
அந்தமான் நிகோபாா் -33 - 0
மேகாலயம் -13 - 1
புதுச்சேரி - 9 - 0
கோவா -7 - 0
மணிப்பூா் -2 - 0
மிஸோரம் -1-0
அருணாசல பிரதேசம் -1- 0
தாத்ரா-நகா் ஹவேலி -1 - 0
பாதிப்பு- 67,152
சிகிச்சை பெற்று வருவோா்- 44,029
மொத்த உயிரிழப்பு- 2,206
குணமடைந்தோா்- 20,917