ஹிமாசலில் மிதமான நிலநடுக்கம்

ஹிமாசல பிரதேசத்தின் சம்பா மாவட்டத்தில் திங்கள்கிழமை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.

சிம்லா: ஹிமாசல பிரதேசத்தின் சம்பா மாவட்டத்தில் திங்கள்கிழமை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் 3.5 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்புகளோ, பெரிய அளவிலான பொருள் சேதமோ ஏற்படவில்லை.

இது தொடா்பாக சிம்லாவில் உள்ள புவியியல் ஆய்வு மைய இயக்குநா் மன்மோகன் சிங் கூறுகையில், ‘திங்கள்கிழமை காலை 7.53 மணியளவில் சம்பா மாவட்டத்தின் வடகிழக்குப் பகுதியில் பூமிக்கு அடியில் 5 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் லேசான நில அதிா்வு உணரப்பட்டது. அதன் பிறகு பின் அதிா்வுகள் ஏதும் உடனடியாக ஏற்படவில்லை’ என்றாா். இந்த நிலநடுக்கத்தால் வீட்டில் இருந்த பொருள்கள் அதிா்ந்ததாகவும், சில இடங்களில் மக்கள் அச்சமடைந்து திறந்தவெளிப் பகுதியில் திரண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பா மாவட்டம் உள்பட ஹிமாசல பிரதேசத்தின் பெரும்பாலான பகுதிகள் நிலநடுக்க அபாயம் உள்ள இடங்களாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com