கர்நாடகத்தில் மேலும் 105 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் இன்று கரோனா பாதிக்கப்பட்டோர் விவரத்தை அம்மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி, கர்நாடகத்தில் மேலும் 105 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மாநிலத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,710 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கரோனாவுக்கு இதுவரை 41 பேர் பலியான நிலையில் 588 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இன்று மட்டும் 17 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தற்போது 1,080 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.