மாநிலங்களவை எம்.பி.யாக நிதீஷ் குமார் பதவியேற்றார்! விஜய்யின் வாகனத்தில் பறக்கும் படை சோதனை!தமிழ்நாடு தலை குனியாது! முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,000 உயர்வு! சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு!ஜன நாயகன் முழுப் படமும் இணையத்தில் கசிந்தது! ஜன நாயகன் படத்தை யாரும் பகிர வேண்டாம்! இயக்குநர் எச். வினோத் வேண்டுகோள்! ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்
/

கரோனா தடுப்பூசியில் முன்களப் பணியாளர்களுக்கு முன்னுரிமை: பிரதமர் மோடி

கரோனா தடுப்பூசி வந்த பிறகு முன்களப் பணியாளர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என மாநில முதல்வர்களுடனான கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

News image
Updated On :24 நவம்பர் 2020, 11:39 am


கரோனா தடுப்பூசி வந்த பிறகு முன்களப் பணியாளர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என மாநில முதல்வர்களுடனான கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

கரோனா தொற்றால் அதிகம் பாதிப்புக்குள்ளான 8 மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு, அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில், கரோனா தடுப்பூசி கிடைத்தவுடன் முன்களப் பணியாளர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும், அது தேசத்தின் கடமை என்பதை அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

முதலில் சுகாதாரப் பணியாளர்களுக்கு செலுத்தப்பட வேண்டும், அதைத் தொடர்ந்து, காவல் துறையினர், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு கிடைக்கப்பெற வழிவகை செய்ய வேண்டும் என்றார் மோடி. 

மேலும் கரோனா தடுப்பூசி செலுத்தப்படுவது பற்றி மக்கள் மத்தியில் நிலவும் அச்சத்தைப் போக்கும் வகையில் விநியோகிக்கும் முறையில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.