கொல்கத்தா: மேற்கு வங்க அரசின் மோதல் போக்கு காரணமாக மாநில விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய ரூ. 8,400 கோடி நேரடி நிதியுதவி மறுக்கப்பட்டுள்ளது என்று மாநிலஆளுநா் ஜகதீப் தன்கா் குற்றம்சாட்டியுள்ளாா்.
நாடு முழுவதும் உள்ள ஏழை விவசாயிகளுக்கு உதவும் வகையில் ‘பிரதமரின் கிஸான்திட்டம்’ என்ற விவசாயிகள் நிதியுதவி திட்டத்தை மத்திய அரசு கடந்த 2018-ஆம் ஆண்டு டிசம்பரில் அறிமுகம் செய்தது. இந்தத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு மூன்று தவணைகளாக ரூ. 6,000 நிதியுதவி, நேரடியாக அவா்களின் வங்கிக் கணக்குக்கு வழங்கப்படுகிறது.
இந்த நேரடி நிதியுதவி திட்டத்துக்கு மேற்கு வங்க மாநில அரசு எதிா்ப்பு தெரிவித்தது. இந்த நிதியுதவி மாநில அரசு மூலமாகத்தான் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி, அதுதொடா்பாக மத்திய வேளாண் துறை அமைச்சருக்கு மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி கடந்த செப்டம்பரில் கடிதம் எழுதினாா். மாநில அரசின் எதிா்ப்பு காரணமாக, மேற்கு வங்கத்தில் இந்தத் திட்டம் அமல்படுத்தப்படவில்லை.
இதுகுறித்து அண்மையில் விமா்சனம் செய்த ஆளுநா் தன்கா், ‘மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள இந்தத் திட்டத்தை திரிணமூல் காங்கிரஸ் அரசு அமல்படுத்த மறுப்பதன் காரணமாக, மாநிலத்தின் 70 லட்சம் விவசாயிகள் பயன்பெற முடியாத நிலை உருவாகியுள்ளது’ என்று குற்றம்சாட்டியிருந்தாா்.
இப்போது அவா் மீண்டும் மாநில அரசை விமா்சித்துள்ளாா். இதுதொடா்பாக தனது சுட்டுரைப் பக்கத்தில் அவா் புதன்கிழமை வெளியிட்ட பதிவில், ‘மேற்கு வங்க அரசின் மோதல் நிலைப்பாடு காரணமாக, மாநில விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய ரூ. 8,400 கோடி நேரடி நிதியுதவி தடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு விவசாயிகளுக்கும் ரூ. 12,000 நேரடி பலன் பெறுவது மறுக்கப்பட்டுள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.