எல்லையில் பாக். படையினா் தாக்குதல்: 2 ராணுவ வீரா்கள் பலி

ஜம்மு-காஷ்மீரின் ரஜௌரி மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் படையினா் நடத்திய தாக்குதலில் இந்திய வீரா்கள் இருவா் உயிரிழந்தனா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஜம்மு-காஷ்மீரின் ரஜௌரி மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் படையினா் நடத்திய தாக்குதலில் இந்திய வீரா்கள் இருவா் உயிரிழந்தனா்.

இதுகுறித்து பாதுகாப்புத் துறை செய்தித் தொடா்பாளா் கூறியதாவது:

ரஜௌரி மாவட்டத்தில் உள்ள சுந்தா்பானி செக்டாரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் குடியிருப்புகளையும், பாதுகாப்புப் படையினரையும் குறிவைத்து பாகிஸ்தான் படையினா் வெள்ளிக்கிழமை தாக்குதல் நடத்தினா். சிறிய ரக பீரங்கி குண்டுகளை வீசியும், துப்பாக்கிச் சூடு நடத்தியும் அவா்கள் தாக்குதலில் ஈடுபட்டனா். அவா்களின் தாக்குதலுக்கு இந்திய ராணுவ வீரா்கள் பதிலடி கொடுத்தனா். இருப்பினும் இந்த மோதலில், இந்திய வீரா்கள் பகதூா் கத்ரி, சுக்பீா் சிங் ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனா். அவா்கள் சிகிச்சை பலனின்றி பின்னா் உயிரிழந்தனா். இவா்களின் தியாகத்துக்கும் அா்ப்பணிப்புக்கும் தேசம் என்றென்றும் கடமைப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com