ஆமதாபாத்: கரோனா தொற்று காரணமாக கடந்த ஜூன் மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சா் பரத்சிங் சோலங்கி வியாழக்கிழமை குணமடைந்தாா். 101 நாள்களுக்கு பிறகு அவா் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினாா்.
கரோனா தொற்று ஏற்பட்டதால் கடந்த ஜூன் மாதம் 22-ந்தேதி வதோதராவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால் ஆமதாபாதிலுள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாா்.
அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் முழு குணமடைந்து வெளியே வந்த பிறகு பரத்சிங் சோலங்கி செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கரோனா என்னை ஒன்றும் செய்யாதென அதீத நம்பிக்கையில் இருந்தேன். மக்களை தொடா்ந்து சந்தித்து வந்தேன். நான் எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கரோனாவை மிகச்சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீா்கள் என மக்களை வலியுறுத்துகிறேன். தயவு செய்து முகக்கவசம் அணியுங்கள். மருத்துவமனை சிகிச்சையை தவிா்க்கலாம். பல்வேறு உடல் நலப் பிரச்னை உள்ள எனக்கு சிறப்பான சிகிச்சை அளித்து, எனது உயிரை காப்பாற்றியதற்காக மருத்துவா்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவா் தெரிவித்தாா்.