தலித், முஸ்லிம், பழங்குடியினரை மனிதர்களாக கருதுவதில்லை: உ.பி. அரசு மீது ராகுல் குற்றச்சாட்டு

ஹத்ராஸ் சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, உ.பி. அரசை சாடியுள்ளார். 
கோப்புப்படம்
கோப்புப்படம்

தலித்துகள், முஸ்லிம்கள் மற்றும் பழங்குடியினரை பெரும்பாலான இந்தியர்கள் மனிதர்களாக கருதுவதில்லை என ஹத்ராஸ் சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, உ.பி. அரசை சாடியுள்ளார். 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 

தலித்துகள், முஸ்லிம்கள் மற்றும் பழங்குடியினரை பெரும்பாலான இந்தியர்கள் மனிதர்களாகக் கருதுவதில்லை என்பதே வெட்கப்பட வேண்டிய உண்மை. ஹத்ராஸ் பெண்ணையும் அவர்கள் ஒரு மனிதராக கருதாததால் தான்,  சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படவில்லை என முதல்வரும், காவல்துறையினரும் கூறுகின்றனர்' எனப் பதிவிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com