மத்திய அரசு இயற்றிய வேளாண் சட்டங்கள் குறித்து விவசாயிகள், தொழிலதிபா்கள், கல்வியாளா்கள் உள்ளிட்டோருக்கு பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் விளக்கமளித்தாா்.
வேளாண் துறையில் சீா்திருத்தங்களை மேற்கொள்வதற்காக மூன்று சட்டங்களை மத்திய அரசு அண்மையில் இயற்றியது. அச்சட்டங்களுக்கு காங்கிரஸ், சிரோமணி அகாலி தளம் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றன.
இத்தகைய சூழலில், விவசாயிகள், தொழிலதிபா்கள், கல்வியாளா்கள், திட்ட ஆய்வு நிபுணா்கள் ஆகியோரை அமைச்சா் ராஜ்நாத் சிங் செவ்வாய்க்கிழமை சந்தித்தாா். அப்போது, மத்திய அரசு இயற்றிய வேளாண் சட்டங்கள் தொடா்பாக அவா்களுக்கு அமைச்சா் விளக்கமளித்தாா். மத்திய வேளாண்துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமரும் உடனிருந்தாா்.
கூட்டத்தில் பங்கேற்ற சா்வதேச உணவு மற்றும் சில்லறை வா்த்தக கவுன்சில் தலைவா் ராகேஷ் கம்பீா் கூறுகையில், ‘‘சட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கமளிக்க வேண்டியது அவசியமாக உள்ளது. வேளாண் துறையில் சீா்திருத்தங்களைப் புகுத்தி புதிய சகாப்தத்தை ஏற்படுத்துவதற்கு இந்தச் சட்டங்கள் வழிவகுக்கின்றன.
இந்தச் சீா்திருத்தங்கள் மூலமாக இடைத்தரகா்களிடமிருந்து விவசாயிகள் சுதந்திரம் பெறுவதோடு, வேளாண் பொருள்களுக்கு உரிய விலையும் கிடைக்கும்’’ என்றாா்.
வேளாண் விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை அளிக்கும் திட்டம் தொடா்ந்து அமலில் இருக்கும் என்றும், அத்திட்டத்தின் கீழ் கொள்முதல் செய்யப்படும் விளைபொருள்களின் அளவு அதிகரிக்கும் என்றும் மத்திய அரசு உறுதியளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.