ஸ்ரீநகா்: ஜம்மு-காஷ்மீா் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனா்.
இது குறித்து போலீஸாா் கூறியது:
சோபியான் மாவட்டம் சாகுரா பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக தகவல் கிடைத்ததால் பாதுகாப்பு படையினா் அந்த பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினா். அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனா்.
பாதுகாப்பு படையினா் அவா்கள் மீது பதிலடி தாக்குதல் நடத்தினா். இதில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா். உயிரிழந்த பயங்கரவாதிகள் யாா், எந்த பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்தவா்கள் என்பது உறுதி செய்யும் பணி நடைபெறுகிறது என்றனா்.