ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?தமிழகத்தில் கூட்டாளிகள்; கேரளத்தில் 'எதிரிகள்'! - மோடி தாக்குபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசுவிஜய் இன்று வேட்புமனு தாக்கல்!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.4 வரை மழைக்கு வாய்ப்பு!வேட்புமனு தாக்கல் அனுமதிக்கப்படாத 4 பொது விடுமுறை நாள்கள் விவரம்!வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! வேட்பாளா்களுக்கு கட்டுப்பாடு!!
/

ஜார்க்கண்டில் மீட்பு விகிதம் 92 சதவீதமாக உயர்வு: ஹேமந்த் சோரன் 

ஜார்க்கண்டில் கரோனா மீட்பு விகிதம் 92 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது தேசிய சராசரியை விட அதிகமாகும் என்று அந்த நாட்டு முதல்வர் ஹேமந்த் சோரன் தெரிவித்துள்ளார். 

News image

COVID-19 recovery rate jumps to 92% in Jharkhand: Hemant Soren

Updated On :19 அக்டோபர் 2020, 7:40 am

ANI

ஜார்க்கண்டில் கரோனா மீட்பு விகிதம் 92 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது தேசிய சராசரியை விட அதிகமாகும் என்று அந்த நாட்டு முதல்வர் ஹேமந்த் சோரன் தெரிவித்துள்ளார். 

ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி ஏழு பேர் உயிரிழந்த நிலையில், ஒட்டுமொத்த இறப்பு எண்ணிக்கை 839 ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து இறப்பு விகிதம் 0.87 ஆக உள்ளது. 

கரோனா சோதனைகளைப் பொறுத்தவரை நாட்டின் எட்டு முன்னணி மாநிலங்களில் ஜார்கண்ட் மாநிலமும் ஒன்றாக உள்ளது. இதற்கு ஜார்க்கண்ட் மக்களின் முழு ஒத்துழைப்பே காரணம் என்று கூறியுள்ளார். 

மாநில மக்களைப் பாதுகாக்க அரசு சில கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். மேலும், மக்கள் தந்த ஆதரவுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இருப்பினும் பாதிப்பு குறைந்துவிடவில்லை, மக்கள் பாதுகாப்புடனும் இருங்கள். பண்டிகை காலங்களில் முகக்கவசம் அணிய மறக்காதீர்கள் என்றும் அவர் கூறியுள்ளார். 

தற்போது 6,502 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 89,011 பேர் இந்த நோயிலிருந்து மீண்டுள்ளனர். மாநிலத்தில் இதுவரை 2,84,8,662 சோதனைகளைச் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.