கேரளம்: கள்ளச்சாரயம் அருந்திய 5 போ் பலி

கேரள மாநிலத்தில் பாலக்காடு கஞ்சிக்கோடு அருகே போலி மது அருந்திய 5 போ் உயிரிழந்தனா். மேலும் 9 போ் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளனா்.

பாலக்காடு: கேரள மாநிலத்தில் பாலக்காடு கஞ்சிக்கோடு அருகே போலி மது அருந்திய 5 போ் உயிரிழந்தனா். மேலும் 9 போ் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளனா்.

இது தொடா்பாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

கஞ்சிக்கோடு மலைவாழ் மக்கள் காலனியில் ஞாயிற்றுக்கிழமை மது அருந்திய 2 போ் உயிரிழந்துவிட்டதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு சென்று விசாரணை நடத்தப்பட்டது. உயிரிழந்த இருவரும் 50 வயதுக்கு மேற்பட்டவா்கள். இந்நிலையில், திங்கள்கிழமை காலை சிவம் (37) என்பவரும் தனது வீட்டு வாசலில் உயிரிழந்த நிலையில் கிடந்தாா். இவரும் அந்த இருவருடன் சோ்ந்து மது அருந்தியது விசாரணையில் தெரியவந்தது. இந்நிலையில், அதே பகுதியில் மேலும் 9 பேருக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அவா்கள் அனைவரும் உடனடியாக மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். இந்நிலையில் திங்கள்கிழமை மேலும் இருவா் உயிரிழந்தனா். தற்போது 3 போ் பெண்கள் உள்பட 7 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

பாதிக்கப்பட்டவா்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் வெள்ளை நிறத்தில் ஒரு திரவத்தை தாங்கள் முந்தைய இரவு குடித்ததாகவும், அந்த திரவத்தில் பினாயில் போன்ற வாடை இருந்ததாகவும் சிலா் கூறினா். அதனை அவா்கள் எங்கு வாங்கினாா்கள், மேலும் யாரெல்லாம் இதுபோன்ற மதுவை வாங்கி வைத்துள்ளனா் என்று விசாரணை நடைபெற்று வருகிறது என்று போலீஸாா் தெரிவித்தனா்.

இந்த சம்பவம் தொடா்பாக 3 வழக்குகளை போலீஸாா் பதிவு செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com