இடைத்தேர்தலில் பண பலத்தால் வெற்றிபெற நினைக்கும் பாஜகவின் திட்டம் பலிக்காது: எச்.டி.குமாரசாமி

இடைத்தேர்தலில் பண பலத்தால் வெற்றிபெற நினைக்கும் பாஜகவின் கனவு பலிக்காது என கர்நாடக முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமி தெரிவித்தார்.
இடைத்தேர்தலில் பண பலத்தால் வெற்றிபெற நினைக்கும் பாஜகவின் திட்டம் பலிக்காது: எச்.டி.குமாரசாமி

பெங்களூரு: இடைத்தேர்தலில் பண பலத்தால் வெற்றிபெற நினைக்கும் பாஜகவின் கனவு பலிக்காது என கர்நாடக முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமி தெரிவித்தார்.
இதுகுறித்து புதன்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 
பெங்களூரு, ராஜராஜேஸ்வரி நகர், தும்கூரு மாவட்டம், சிரா உள்ளிட்ட தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த 2 தொகுதிகளிலும் பண பலத்தால் வெற்றிபெற நினைக்கும் பாஜகவின் கனவு பலிக்காது. 
கடந்த முறை மண்டியா மாவட்டம், கே.ஆர்.பேட்டை தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக பண பலத்தால் வெற்றி பெற்றது. அது இந்தமுறை சாத்தியமாகாது. எல்லா நாளும் ஞாயிற்றுக்கிழமையாக இருக்க முடியாது என்பதைப்போல இடைத்தேர்தல்களில் பாஜக பயன்படுத்தும் தந்திரம் எதுவும் பலிக்காது.
 இடைத்தேர்தல் நடைபெறும் 2 தொகுதிகளிலும் மஜத வேட்பாளர் வெற்றிபெறுவது உறுதி.
நான் முதல்வராகப் பதவி வகித்தபோது எப்படி இருந்தேன் என்பது மக்களுக்குத் தெரியும். என்னைப்போல மக்களுடன் மக்களாகப் பழகியவர்கள் யாரும் இருக்க முடியாது. அதிகாரம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்கள் எனது இல்லத்துக்கு வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். 
இதைப்பற்றி பாஜக மாநிலத் தலைவர் நளின்குமார் கட்டீலுக்கு எதுவும் தெரியாது. எனவேதான் என்னைப் பற்றி தவறான பரப்புரையை அவர் செய்து வருகிறார். ஏழைகளுக்கு நான் செய்த உதவிகளைப் போல, நளின்குமார் கட்டீல் எத்தனை பேருக்கு செய்துள்ளார் என்பதனை மாநில மக்களுக்கு விளக்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com