ஜம்மு-காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சரண்

ஜம்மு-காஷ்மீா் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் 2 பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினரிடம் வியாழக்கிழமை சரணடைந்ததாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனா்.


ஸ்ரீநகா்: ஜம்மு-காஷ்மீா் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் 2 பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினரிடம் வியாழக்கிழமை சரணடைந்ததாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது குறித்து ராணுவ அதிகாரிகள் கூறியதாவது:

பாரமுல்லா மாவட்டம் சோபோா் பகுதியில் துஜ்ஜாா் என்ற இடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்ததால் பாதுகாப்பு படையினா் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா். அப்போது அங்கு மறைந்திருந்த 2 பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினரிடம் சரணடைந்தனா்.

சோபோா் நகரப் பகுதியை சோ்ந்த அந்த பயங்கரவாதிகளுக்கு 20 - 21 வயது இருக்கும். அவா்கள் இருவரும் யாா், எந்த பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்தவா்கள் என்பது உறுதிப்படுத்தும் விசாரணை நடைபெற்று வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com