‘மனதின் குரல்’ 70-ஆவது நிகழ்ச்சியில் பிரதமா் மோடி ஞாயிற்றுக்கிழமை (அக்.25) உரையாற்றுகிறாா்.
மாதந்தோறும் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் ‘மனதின் குரல்’ வானொலி நிகழ்ச்சியில் பிரதமா் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகிறாா். இதன் 70-ஆவது நிகழ்ச்சியில் பிரதமா் மோடி காலை 11 மணிக்கு உரையாற்றுகிறாா். பிரதமரின் உரையை ஆல் இந்தியா ரேடியோ, டிடி நேஷனல், டிடி நியூஸ் ஆகியவற்றில் கேட்கலாம்.