மகாராஷ்டிரத்தில் புதிதாக 6,190 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (வெள்ளிக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
அங்கு புதிதாக 6,190 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 16,72,858 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 8,241 பேர் குணமடைந்துள்ளனர். 127 பேர் பலியாகியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 43,837 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 15,03,050 பேர் குணமடைந்துள்ளனர். 1,25,418 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.